வியாழன், 13 ஆகஸ்ட், 2015

இட்லி மஞ்சூரியன்

இட்லி மஞ்சூரியன்
காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி சூப்பராக இருக்கும்.
தேவையான
பொருட்கள் : 
இட்லி – 8
மைதா மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் – தேவைகேற்ப
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப..
செய்முறை :
இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்
இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும்.
இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்து வைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக