புதன், 26 ஆகஸ்ட், 2015

ஓமம் பிஸ்கட்


ஓமம் பிஸ்கட்

*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.

இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.

*2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க).

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.

*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்

ஓம தண்ணீர்



ஓம தண்ணீர்---தீரும் நோய்கள்:

ஓம தண்ணீர்

தேவையானது
1. ஓமம் - 1,000 கிராம்
2. தண்ணீர்- 10 லிட்டர்

செய்முறை:

ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறக்கி, அது பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

அளவும் அனுபானமும்:

15 முதல் 30 மில்லி வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்.

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.
------------------------------------------------------------------------------
தேவையானது

ஓமம் : 2 தேக்கரண்டி
நீர் - 1 கப்

செய்முறை:

2 தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து நன்றாக பொடி செய்து 1 கப் தண்ணீர் விட்டு பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

வடிகட்டிய ஓம தண்னீரை ஒரு டீ ஸ்பூன் இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.


முள்ளங்கி ஓமம் சப்பாத்தி



முள்ளங்கி ஓமம் சப்பாத்தி

தேவையான பொருட்கள்....

கோதுமை மாவு - 1 கப்
முள்ளங்கி - 2 பெரியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஓமம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

செய்முறை...

• முள்ளங்கியை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்

• ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஓமத்தை போட்டு சிறிது கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் துருவிய முள்ளங்கி, கடாயில் உள்ள மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்..(முதலில் மாவில் தண்ணீர் ஊற்ற கூடாது. முள்ளங்கியில் உள்ள தண்ணீரே போதுமானது.)

• மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

• சுவையான சத்தான முள்ளங்கி ஓமம் சப்பாத்தி ரெடி

குறிப்பு- மாவை விட முள்ளங்கி அதிகமாக இருக்க வேண்டும்.


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ்

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் (2)

தேவையானவை:
குதிரைவாலி - 1 கிலோ
குடமிளகாய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மசாலாப் பொடி - 1தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் நீள வாக்கில் மெலிதாக நறுக்கி தனித்தனியே வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழிந்து விதை நீக்கி வைக்கவும். குதிரைவாலியை 1 மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்து எடுத்து 2 தேக்கரண்டி நெய், சிறிது உப்பு சேர்த்து சாதத்தை பரப்பி ஆர விடவும். பிறகு வெங்காயம்,
குடமிளகாயை வதக்கி அத்துடன் சீரகத்தூள், கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி நன்றாகக் கலக்க, கமகம குதிரைவாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் தயார்.

சுண்டைக்காய் புளிக் குழம்பு (1)

சுண்டைக்காய் புளிக் குழம்பு (1)
தேவையானவை:
சுண்டைக்காய் - 1/4 கிண்ணம்.
தேங்காய்த் துருவல் 1/4 கிண்ணம்.
பயற்றம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1/4 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கிண்ணம்.
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கியது - 1/4 கிண்ணம்.
உப்பு, கடுகு, கறிவேப்பிலை தேவையான அளவு.
செய்முறை: பச்சை சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுத்து, அத்துடன் பயற்றம் பருப்பையும் போட்டு 1 கிண்ணம் தண்ணீர் கலந்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து எடுத்து, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்த சுண்டைக்காய் கலவை, அரைத்த தேங்காய் கலவை, புளிக்கரைசல் இவற்றை விட்டு 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கிளறி 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் உப்பு, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கிளறி இறக்கிவிடவும்.
இக்குழம்பானது சுடுசோறு, இட்லி, ஆப்பம், தோசைக்கு, தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். மேலும் பச்சை சுண்டக்காய் மருத்துவ குணம் கொண்டதால் அனைவருக்கும் ஏற்றது.

சனி, 22 ஆகஸ்ட், 2015

எத்தனை முட்டை சாப்பிடலாம் ????




ஆணழகன் போட்டி மற்றும் போலீஸ் 

வேலைக்குத் தயாராகிறவர்கள் பெரும்பாலும் 

முட்டைகளை அடுக்கடுக்காக உடைத்துக் 

குடித்து ஆற்றல் பெறுவதைப் போல பல 

திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

இப்படி, உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க 

வேண்டியவர்களுக்கு முட்டை ஒரு 

அத்தியாவசிய உணவு என்றும், தினமும் ஒரு 

முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான 

உடல்நலத்தைப் பெறலாம் என்றும் 

சொல்லப்படுகிறது. அதே வேளையில், 

‘முட்டையின் வெள்ளைக்கரு நல்லது, மஞ்சள் 

கருவை சாப்பிடக்கூடாது’ என்றும் 

சொல்கிறார்களே... இது எந்த அளவு உண்மை?


ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை முட்டை 

அனுமதி?

‘‘பாடி பில்டர்கள் டஜன்கணக்கில் முட்டை 

சாப்பிட்டாலும், அதற்கேற்ற கடுமையான 

உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் 

அவர்களுக்கு எவ்வித பிரச்னைகளும் 

ஏற்படாது. 

தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் 

அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் 

புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் 

காரணமாகவே பாடி பில்டர்ஸ் அடுக்கடுக்காக 

முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள். 

ஒருவர் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் 

என்பதை அவரது வாழ்வியல் சூழலை 

வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் 

ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் 

கொண்டாலே போதும். உடல் உழைப்பு 

அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு 

நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். 

பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் 

சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை 

சாப்பிடலாம்.

மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால், தினமும் 

ஒன்று சாப்பிட்டால் போதும். தேவையான 

வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் உடலுக்கு 

நல்லது செய்யும் கொழுப்பு அமிலமான 

ஒமேகா3 

ஆகியவை இருந்தாலும், சில கெட்ட 

கொழுப்புச்சத்துகளும் அடங்கியிருப்பதால் 

மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடக்கூடாது.

இரவு நேரத்தில் முட்டை சாப்பிடக்கூடாது என்று 

சிலர் சொல்வதுண்டு. இரவு நேரத்தில் முட்டை 

சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப் 

போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட 

வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து 

முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் 

உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, 

இதய நோய்கள் வரக்கூடும். தேவையான 

உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் 

முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை 

கூட்டும்.

முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 1015 

நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் 

ஒருவித வாசனை வரும். முட்டை அதன் 

இயற்கைத் தன்மையை இழந்துவிடும். 

தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் 

முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது. 

கொதிக்கும் தண்ணீரில் முட்டையை உடைத்து 

ஊற்றி Pouched egg தயாரிப்பார்கள்.


இதுவும் உடல்நலத்துக்கு ஏற்றது. காய்கறிகளை 

நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து 

ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். 

ஹாஃப் பாயிலோ, ஆம்லெட்டோ... அதிகமாக 

வேக வைக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. 

முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் 

எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆதலால், முட்டை 

சாப்பிடுங்கள்... உடலுக்கு தேவையான 

பயிற்சிகளையும் கொடுங்கள்!’’

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் 

ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் 

கொண்டாலே போதும்!

காஞ்சிபுரம் இட்லி + கொத்ஸு

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்
பச்சை அரிசி ஒரு கிண்ணம்
முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்
மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.
சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.
தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.
ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)
இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.
இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.
கொத்சு:
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.
அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

அடித்த முட்டைக்குழம்பு

அடித்த முட்டைக்குழம்பு / Beaten Egg cube curry

அடித்த முட்டைக்குழம்பு:

நாம் சாதாரணமாக செய்யும் முட்டைக்குழம்பு 
முழு முட்டையை அவித்து, காரக்குழம்பு 
செய்வது போல் அல்லாமல், இது 
அடித்தமுட்டையில், பொடியாக வெட்டிய 
வெங்காயம் சேர்த்து வேகவைத்து, சதுரமாக 
வெட்டி குழம்பில் சேர்க்கிறோம். இதனால் 
முட்டையின் வாடை குறைந்து குழம்பை நன்கு 
உறுஞ்சி அந்த முட்டை உண்ணும் பொழுது 
சுவை அதிகரித்துள்ளதை உணரலாம்.
அடித்த முட்டைக்குழம்பு:
அடித்த முட்டைக்குழம்பு
தேவையான பொருட்கள் -1 :
முட்டை-3
வெங்காயம்-1
குடைமிளகாய் -1 தேவைப்பட்டால்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு-1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் -2
சின்ன வெங்காயம் -9
பூண்டு-7
தக்காளி-1 பெரியது
கறிவேப்பிலை, புளிச்சாறு-2
11902372_941852649189679_1647508677_o (1)
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பத்திரத்தில் முட்டையை உடைத்து 
ஊற்றிக்கொள்ளவும், பொடியாக வெட்டியா 
வெங்காயம் .
2. குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் 
மிளகுத்தூள் சேர்த்து நன்கு 
அடித்துக்கொள்ளவும் .
3. அகலமான ஒரு பானில் எண்ணெய் தடவி 
அடித்த முட்டைக்கலவையை ஊற்றவும்.
11872729_941852739189670_1316172343_n
4. இட்லி பத்திரத்தில் தண்ணீர் கொதிக்க 
வைத்து, ஆவியில் வேகவைத்து 
எடுத்துக்கொள்ளவும்.

11911455_941852702523007_2028394596_n
5. ஆறியதும் சதுரமாக 
வெட்டிவைதுக்கொள்ளவும்.
dsc08040 (1)
6. மற்றொரு கடாயில் எண்ணெய் காய வைத்து 
தாளிதம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
7.வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை 
சேர்த்து நன்கு வதக்கவும் 
பொன்னிறமாகவதக்கவும்.
8. மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் உப்பு,கரைத்த 
புளிச்சாறு சேர்க்கவும், 1 1/2 டம்ளர் தண்ணீர் 
சேர்த்துக்கொதிக்க விடவும்,
11872600_941852645856346_1959221129_n
9.  5 நிமிடம் கொதித்த பின்னர் வேகவைத்து 
வெட்டிய முட்டையை சேர்த்து இன்னும் 3 
நிமிடம் கொதிக்க விடவும்.
11924721_941852619189682_1616603713_nசுவையான அடித்த முட்டைக்குழம்பு ரெடி

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மஷ்ரூம் காப்சிகம் மசாலா



MUSHROOM CAPSICUM MASALA

மஷ்ரூம் காப்சிகம் மசாலா

தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் - 250 ௦ கிராம்

காப்சிகம் – 3 எண்ணம் ( பருத்தது )

பெரிய வெங்காயம் – 3 எண்ணம்

தக்காளி -2 எண்ணம்

இஞ்சி – ஒரு பாக்கு அளவு

பூண்டு -2 பல்

பச்சை மிளகாய் - 3 எண்ணம்

ஏலக்காய் -2 எண்ணம்

லவங்கம் – 2 எண்ணம்

பட்டை – சிறிதளவு

முந்தரி பருப்பு- 3 எண்ணம்

தேங்காய் துருவல் – 3 எண்ணம்

மல்லி தழை : தேவையான அளவு

மஞ்சள் பொடி- மிக சிறிதளவு

செய்முறை :

வெங்காய தக்காளி கலவை : 

முதலில் பெரிய வெங்காயத்தையும், 

தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .

கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி 

வெங்காயம் பின்பு இஞ்சி ,பூண்டு அதன்பின்

தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .அடுப்பை 

அணைத்த பின் , மல்லி தழையையும் நறுக்கி

அதன் மேல் இட்டு கிளறி விட்டு ஆற வைக்கவும் .

ஆறிய பின் இக்கலவையை மிக்ஸ்யில் இட்டு 

நன்றாக அரைத்து தனியே எடுத்து வைத்து 

கொள்ளவும் .

தேங்காய் கலவை 

முந்தரி பருப்பு , ஏலக்காய் , பட்டை, லவங்கம் 

போட்டு பொடியாக்கி விட்டு , பின் அதனுடன் 

தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு 

விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும் .

மசாலா தயாரிப்பு :

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய மஷ்ரூம் 

போட்டு , சிறிதளவு உப்பும் , மஞ்சள் பொடியும் 

போட்டு கிளறவும் .

மஷ்ரூம் விரைவில் வெந்து விடும் . எனவே 

நிறைய நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் . அது 

வெந்தவுடன் , அரைத்து வைத்த தக்காளி 

வெங்காய கலவையை அதனோடு சேர்க்கவும். 

பின் அரைத்து வைத்த தேங்காய் கரம் மசாலா 

கலவையையும் அதனோடு சேர்க்கவும் .


இறுதியாக பொடியாக நறுக்கிய காப்சிகம் அதன் 

மேல் தூவி விட்டு நன்றாக கிளறவும் . காப்சிகம் 

முழுவதுமாக வேக வேண்டாம் .

பின் அடுப்பை அணைத்து விட்டு , நறுக்கிய 

மல்லிதழையை தூவி விடவும்.


மஷ்ரூம் காப்சிகம் மசாலா ரெடி .

இது அனைத்து ரொட்டி வகையறாக்களுடன் 

சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

தேங்காய் பால் பணியாரம்

தேங்காய் பால் பணியாரம் க்கான பட முடிவு



தேங்காய் பால் பணியாரம்

தேவையான பொருள்கள்

பச்சரிசி – 1/2 கப்
உளுந்து – 1/2 கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக மாவு பதத்திற்கு அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், சீனி சேர்த்து கொள்ளவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்

நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.. தேவையான பணியாரத்தை எடுத்து தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும் 

மைசூர் போண்டா



Mysore Bonda

மைசூர் போண்டா

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறு துண்டு

கறிவேப்பிலை - சிறிது

பச்சை கொத்துமல்லி - சிறிது

தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் 

ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் 

கழுவி, 

நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் 

போட்டு, 

உப்பு சேர்த்து மைய அரைக்கவும். 

அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து 

அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு 

மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து 

நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் 

சரியான பதம்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 

கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக 

நறுக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். அத்துடன் 

மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து 

நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணையைக் காய 

வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் 

சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு 

உருண்டைகளாக உருட்டி எண்ணையில் 

போட்டு 

சிவக்க சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.