இது செட்டிநாட்டின் கைவண்ணம்
கோலா உருண்டைக் குழம்பு !!
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிது,
கறிமசால் பொடி - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிது,
கறிமசால் பொடி - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் பிடித்து வைத்த உருண்டைகளை அதில் போடவும். கறிமசால் பொடி சேர்க்கவும். குழம்பை சிம்மில் வைத்து உருண்டைகள் நன்றாகப் பக்குவமாக வெந்து வரும்போது இறக்கி கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.
கோலா உருண்டைக்குழம்பு தயார்.
கோலா உருண்டைக்குழம்பு தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக