திங்கள், 14 செப்டம்பர், 2015

ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்




வாங்க சாப்பிடலாம்..!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்
பொதுவாக காய்கறிகளும், பழங்களும், முட்டை, மீன், கறி வகைகளும் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் தான் உள்ளன. அவற்றை சரியான அளவில், அதற்கேற்றவாறு சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
அந்த வகையில், உடலுக்கு நன்மை அளிக்கும் முக்கியமான 10 உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

ரைத்தா :
ரைத்தா என்றதுமே.. என்ன ரைத்தாவா.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இதில் நிறைய இருக்கிறது. தயிரில் வெங்காயம் அல்லது வெள்ளரி அல்லது தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து ரைத்தா செய்யலாம். இதன் மூலம் ரைத்தாவில் சேர்க்கப்படும் தயிர் முதல் காய்கறி, பழம் வரையிலான அனைத்துப் பொருட்களின் சத்துக்களும் எந்த விதத்திலும் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கிறது.

மோர் :
உடல் சூட்டைத் தணிக்கவும், உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக அளிக்கவும் மோர் பயன்படுகிறது. அவ்வாறான மோரில் குறைந்த கொழுப்புச் சத்து இருப்பது மேலும் நன்மை அளிக்கிறது.

பருப்பு :
பருப்பு வகைகளில் ஏராளமான புரதச் சத்து உள்ளது. இவை உடலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பருப்பு வகைகளை உண்ணலாம்.

தந்தூரி சிக்கன் :
தயிர் மற்றும் மசாலா கலந்து நன்கு ஊறவைத்து தீயில் வெந்த தந்தூரி சிக்கன் உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும். இதில் அதிகப்படியான எண்ணெய் இல்லாததால் தேவையற்ற கொழுப்பு சேர்வதில்லை.

ராஜ்மா :
வட இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ராஜ்மா. தற்போது நம்மூர்களிலும் அதிகம் விற்பனையாகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்த உணவாக உள்ளது. இதில் அதிகமான புரதச் சத்து உள்ளது.

அத்திப்பழம் :
பழச்சாறு என்றாலே நாம் பொதுவாக ஆப்பிள், ஆரஞ்சு பழங்களையே நாடுவோம். ஆனால் ஒரு முறை அத்திப்பழ சாறு பருகிப் பாருங்கள். இதில் வயிற்றுக்கு நன்மை பயக்கும் நிறைய விஷயங்கள் உள்ளன.

மூக்கடலை :
மூக்கடலையில் இரண்டு வகை உள்ளது. இரண்டிலுமே நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை வேக வைத்து குழந்தைகளுக்கு அளிக்லாம். மேலும், முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு பகல் பொழுதில் எடுத்து பார்த்தால் முளை விட்டிருக்கும். இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பலத்தை அளிக்கும்.

காராமணி :
முந்தைய காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த காராமணி தற்போது பல வீடுகளில் பயன்படுத்தப்படுவதே இல்லை. முந்தைய நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் வேகவைத்து சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குழந்தைகளுக்குத் தேவையான உடல் பலத்தை அளிக்கும்.

கீரைகள் :
கீரைகள் என்றதும் அதைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை. ஒவ்வொரு வகை கீரையிலும் பல சத்துக்கள் உள்ளன. வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது கீரை சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை அண்டாது.

மீன் வகை :
மீன்களில் காணப்படும் பல்வேறு விஷயங்கள் உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளன. அசைவ பிரியர்கள் அவ்வப்போது மீன்களை உண்பது நல்லது.

ஊட்டச்சத்து: தெரிந்ததும் தெரியாததும்!




எப்படிச் சாப்பிட வேண்டும்?- ஊட்டச்சத்து: தெரிந்ததும் தெரியாததும்!
எது ஊட்டச்சத்து, ஒரு வேளைக்கு-ஒரு நாளைக்கான உணவை எப்படித் திட்டமிட வேண்டும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் எப்படிப்பட்ட உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால், ஊட்டச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்து தொடர்பான சில பொதுவான சந்தேகங்களுக்கு, விடைகள் இதோ:
சத்தான உணவு என்பது எது?
புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகிய சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை. ஒன்றிணைந்த இந்தச் சத்துகளின் மூலமாக உடல் வளர்ச்சி, செயல்திறன் போன்றவை கிடைக்கின்றன.
சமச்சீரான உணவு எது?
நாம் தினமும் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகியவை தேவையான அளவில் இருப்பதைச் சமச்சீரான உணவு என்கிறோம். தானியங்கள், பயறு வகைகள், இறைச்சி சார்ந்த பொருட்கள், காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றைக் கலந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டால், நமக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். ஏதாவது ஒன்றை மட்டும் அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்காது, இதனால் ஊட்டச்சத்துக்குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். அல்லது ஏதேனும் சில சத்துகள் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்து உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
சமச்சீரான உணவில் இருக்க வேண்டிய கலோரியின் அளவு என்ன?
மாவுச்சத்திலிருந்து 50-லிருந்து 60 சதவீதம் கலோரியும், புரதத்திலிருந்து 10 முதல் 15 சதவீதக் கலோரியும், கொழுப்பு வகைகளிலிருந்து 20 முதல் 30 சதவீதம் கலோரியும் நமக்குக் கிடைக்க வேண்டும்.
செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?
செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயால் உடலுக்கு நலம் கிடைக்குமா?
ஒரேயொரு எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதைவிட, இரண்டு வகையான எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். உதாரணத்துக்குக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்-பிரான் (அரிசி தவிட்டு) எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு வாரத்துக்குச் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பு அதிகரிப்பதில்லை. உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். எனவே, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?
தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.
தேவைக்கு அதிகமான உப்பைச் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயருமா?
உப்பு சுவை சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதிக உப்பால் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். ஒவ்வாமை இல்லாதவர்கள் உப்பு அதிகம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் உயரும்.
சத்துணவில் பழங்கள் மற்றும் பழச்சாறின் பங்கு என்ன?
எளிமையாக ஜீரணமாகும் பானங்களில் பழச்சாறு முதன்மையானது. ஒரு டம்ளர் பழச்சாறு அருந்தும்போது, ஒரு பழத்தைச் சாப்பிடும்போது கிடைக்கும் சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கான வைட்டமின் 'சி' தேவையை இது நிறைவேற்றும். பழச்சாறைக் குடிக்கும்போது நார்ச்சத்தும் கிடைக்கிறது. பழச்சாறில் இருக்கும் சர்க்கரை, வைட்டமின்கள், புரதம், தாதுகள் ஆகியவை உடனடியாக ரத்தத்தின் செல்களில் கலக்கும். மலச்சிக்கலைப் போக்குவதற்கும் இது பயன்படுகிறது.
சுண்ணாம்புச் சத்தின் தேவை என்ன?
எலும்பின் உறுதித்தன்மைக்குச் சுண்ணாம்புச் சத்து அவசியம். பால், பால் பொருட்கள், பசுமையான கீரைகள், முட்டை ஆகியவற்றிலிருந்து சுண்ணாம்புச் சத்து கிடைக்கிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன?
புரதம், கொழுப்பு, லாக்டோஸ், வைட்டமின்கள், பலவகையான தாதுகள், தண்ணீர், என்சைம்கள் ஆகியவற்றின் கூட்டு வடிவமே தாய்ப்பால். குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மையான முழு சத்துகள் அடங்கிய உணவு. நோய் எதிர்ப்பு சக்தியையும் பல தொற்றுகளிலிருந்து தடுக்கும் ஆற்றலையும் குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பால், எளிதில் ஜீரணமும் ஆகிறது.
l எளிய முறையில் சமைக்கப்பட்ட புதிய உணவையே உட்கொள்ளுங்கள்.
l வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்குத் தயங்காதீர்கள். ஆவியில் வேக வைத்த உணவை உண்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். கூடியமட்டும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள்.
l பழங்களையும் காய்கறிகளையும் தோலோடு சாப்பிடுங்கள். கேரட் போன்றவற்றை மேல் தோல் சீவி, நன்றாக நீரில் கழுவிய பின் சாப்பிடலாம்.
l சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பாகவே காய்கறி, பழங்களைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கி வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் சத்து இழப்பு ஏற்படும்.
l பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுங்கள். துரித உணவை நாடாதீர்கள்.
l சாப்பாட்டுக்குப் பதிலாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடாதீர்கள்.
l உணவில் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
=யுகன்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சிக்கன் fry குழம்பு


வறுத்த சிக்கன் குழம்பு க்கான பட முடிவு


என்னென்ன தேவை?


சிக்கன் - அரைக் கிலோ


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:


வர மிளகாய் - 8

மல்லி - 4 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - 3 இன்ச் அளவு

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கப்



தாளிக்க தேவையான பொருட்கள்:


பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3


எப்படி செய்வது?


சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு 

சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி 

மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 

அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 

தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர 

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, 

சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு 

வறுக்கவும். 


இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு 

எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் 

ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய 

வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 

ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த 

சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு 

கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் 

பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 

சுவையான வறுத்த சிக்கன் fry குழம்பு  ரெடி. 


புதன், 26 ஆகஸ்ட், 2015

ஓமம் பிஸ்கட்


ஓமம் பிஸ்கட்

*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.

இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.

*2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க).

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.

*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்

ஓம தண்ணீர்



ஓம தண்ணீர்---தீரும் நோய்கள்:

ஓம தண்ணீர்

தேவையானது
1. ஓமம் - 1,000 கிராம்
2. தண்ணீர்- 10 லிட்டர்

செய்முறை:

ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறக்கி, அது பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

அளவும் அனுபானமும்:

15 முதல் 30 மில்லி வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்.

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.
------------------------------------------------------------------------------
தேவையானது

ஓமம் : 2 தேக்கரண்டி
நீர் - 1 கப்

செய்முறை:

2 தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து நன்றாக பொடி செய்து 1 கப் தண்ணீர் விட்டு பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

வடிகட்டிய ஓம தண்னீரை ஒரு டீ ஸ்பூன் இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.


முள்ளங்கி ஓமம் சப்பாத்தி



முள்ளங்கி ஓமம் சப்பாத்தி

தேவையான பொருட்கள்....

கோதுமை மாவு - 1 கப்
முள்ளங்கி - 2 பெரியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஓமம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

செய்முறை...

• முள்ளங்கியை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்

• ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஓமத்தை போட்டு சிறிது கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் துருவிய முள்ளங்கி, கடாயில் உள்ள மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்..(முதலில் மாவில் தண்ணீர் ஊற்ற கூடாது. முள்ளங்கியில் உள்ள தண்ணீரே போதுமானது.)

• மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

• சுவையான சத்தான முள்ளங்கி ஓமம் சப்பாத்தி ரெடி

குறிப்பு- மாவை விட முள்ளங்கி அதிகமாக இருக்க வேண்டும்.


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ்

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் (2)

தேவையானவை:
குதிரைவாலி - 1 கிலோ
குடமிளகாய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மசாலாப் பொடி - 1தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் நீள வாக்கில் மெலிதாக நறுக்கி தனித்தனியே வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழிந்து விதை நீக்கி வைக்கவும். குதிரைவாலியை 1 மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்து எடுத்து 2 தேக்கரண்டி நெய், சிறிது உப்பு சேர்த்து சாதத்தை பரப்பி ஆர விடவும். பிறகு வெங்காயம்,
குடமிளகாயை வதக்கி அத்துடன் சீரகத்தூள், கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி நன்றாகக் கலக்க, கமகம குதிரைவாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் தயார்.